மிகவும் ஆபத்தான அரளி The very very dangeros and The more poisonous oleander - சியோ தமிழ்

Breaking

Thursday, March 24, 2016

மிகவும் ஆபத்தான அரளி The very very dangeros and The more poisonous oleander





அரளி நச்சுத் தன்மை வாய்ந்த தாவரம். நீளமான இலைகளுடன் காட்சியளிக்கும் அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்றரளி
ஆகிய வகைகள் உள்ளன. இதன் மலர்மாலைகளைக்
கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர்.
திருக்கரவீரம், திருக்கள்ளில் முதலிய திருக்கோயில்களில்
தலமரமாக அலரி உள்ளது.மலர்கள் காட்சிக்காக
இங்கு வைக்கப்பட்டுள்ளன.
விஷச்செடியில் உள்ள வீரிய மருத்துவ குணம்!

அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம்.
இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது.
அரளி, செவ்வரளி என்றழைக்கப்படும் இந்த தாவரம்
இந்தியா முழுவதும் தோட்டங்களிலும் கோவில்
பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப்
பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது.
மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள், வெள்ளை
நிறத்தில் காணப்படுகின்றன. இத்தாவரம்
தற்கொலைக்கான முயற்சியுடனும், கருக்கலைப்புடனும்
தொடர்பு படுத்தப்பட்டதாகும். ஆனால் இதில் மருத்துவப் பயனும் அடங்கியுள்ளது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் இருந்து எடுக்கப்பட்ட
செயல்படும் வேதிப்பொருட்களின் கராபின், நீரியோடெரின், நீரியோமோசைடுகள், நீரியாசைடு,
புளூமெரிசின்,கிளைகோசைடு, ஆகியவை முக்கியமானவை.
மருத்துவப்பயன் உடைய பகுதிகள்
தாவரத்தின் எல்லா பகுதிகளிலும் மேல்
பூசும் மருந்தாகப் பயன்படுகின்றன.
குறிப்பாக இலைகள், வேர் மற்றும்
வேர்ப்பட்டை மிக முக்கியமானவை.
தோல்நோய்களுக்கு மருந்து
இலைகளின் கசாயம் வீக்கம் குறைப்பான் ஆகும்.
இலைகளின் சாறு பால்வினை நோய் புண்களுக்கு
மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கண்நோய்களுக்கும்
இலைகளின் புதிய சாறு மருந்தாகும். வேர்ப்பட்டை
 மற்றும் இலைகளின் களிம்பு படை மற்றும் தோல்
 நோய்களில் பயன்படுத்தப்படுகிறது.
வேர் மட்டும் வேர்பட்டை நல்லதொரு கழலை
கரைக்கும் பூச்சு ஆகும். உடல்மெலிவிற்கு உதவுகிறது.
கருச்சிதைவினை தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் களிம்பு தொழுநோய் நாட்பட்ட புண் மற்றும் ரத்தம் கட்டியுள்ள இடங்களில் மருந்தாக தடவப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் காரவீரதியதைலம், தோல்நோய்களுக்கு முக்கிய மருந்தாக பயன்படுகிறது.
புற்றுநோயை குணப்படுத்தும்
'நைகோபோடிஸ் போடிடா" என்ற தாவரவியல் பெயர் கொண்ட அரளியின் இலை, வேர்களில் இருந்து கிடைக்கும் மூலிகைப் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்க உகந்தது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும்.
நஞ்சாகும் அரளிச் செடி
இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் பயன்படுத்தினால் தலை எரிச்சல் காய்ச்சல், பித்தக் கோளாறுகள் போன்றவை நீங்கும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் ஏற்படவில்லை எனில் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.
அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

விஷம் மிக்க அரளி செடி ஒரு நல்ல மூலிகை -- எத்தனை பேருக்கு தெரியும்..?
*எங்கும் எளிதாகக் கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும் இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. இதனுடைய இலையையோ, வேரையோ யாரும் மருத்துவ நோக்கில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள், பயன்படுத்தக்கூடாது. *ஏனெனில் அவை கடுமையான நச்சுத்தன்மை வாய்ந்தவை.
அரளிச்செடியின் மலரை மட்டுமே அதுவும் வெளிப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்துக் கந்தகத்துடன் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் கிரந்தி, குழிப்புண், குஷ்டம் போன்றவற்றை விரைவில் குணமாகும். *இதனை தக்க முறைப்படி மருந்தாக்கிப் யன்படுத்தினால் தலை எரிச்சல், சுரம், பித்தக் கோளாறுகள் போன்றவை அகலும். ஆனால் இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.
*வறண்ட நிலத்தில் கூட அரளி அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். *தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் அரளி தாவரம் வளர்க்கப்படுகிறது.
*அரளி தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். அரளி நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி. *
அரளி நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
அரளி செடியில் மகசூல் அதிகரிக்க புது யுக்தி
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், அரளி செடியில் பூ உற்பத்தியை அதிகரிக்க செய்ய, முதிர்ந்த செடியில் பதியம் போட்டு புது செடிகளை உற்பத்தி செய்யும் யுக்தியை விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர்.
சேலம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டி, குரால்நத்தம், குள்ளம்பட்டி, நல்லியாம்புதூர், காளியாகோவில்புதூர், அடிக்கரை உள்ளிட்ட பகுதியில்,1,000 ஏக்கர் பரப்பளவில் அரளி பூ செடி நடவு செய்துள்ளனர். இங்கு, வெள்ளை, ரோஸ், மஞ்சள் மற்றும் சிகப்பு உள்ளிட்ட ஐந்து வகையான வண்ணங்களில் விளையும், அரளி பூவை நாள்தோறும் அதிகாலையில் அறுவடை செய்து, சேலம், சென்னை,பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.
ஆரம்பத்தில் ஈரோடு, பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து அரளி செடிகளை விவசாயிகள் வாங்கி வந்து நடவு செய்தனர். தற்போது, தங்களுக்கு தேவையான அரளி செடிகளை, பதியம் போட்டு தயார் செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதிர்ந்த அரளி செடியில், நாளுக்கு நாள் பூ உற்பத்தி குறைந்து காணப்படும். அந்த செடிகளை அழிந்துவிட்டு, மற்றொரு வயலில் புதிதாக இளம் செடிகளை நடவு செய்து பூ உற்பத்தி செய்து வந்தனர். தற்போது, முதிர்ந்த செடிகளில் இருந்து பதியம் உற்பத்தி செய்து, அதே வயலில் புதிய செடிகளை நடவு செய்யும் யுக்தியை விவசாயிகள் கடைபிடித்து வருகின்றனர்.
பனமரத்துப்பட்டி அடிக்கரை விவசாயி சிவகுமார் கூறியதாவது:
ஒரு வயலில், ஐந்து ஆண்டுக்கு மேலான இருக்கும் அரளி செடி உயரமாக வளர்ந்தும், பூ உற்பத்தி குறைந்தும் காணப்படும். முன்பு அந்த வயலில் இருக்கும் செடியை வெட்டிவிட்டு, அடுத்த வயலில் புதிதாக அரளி செடி நடவு செய்யப்படும். தற்போது, முதிர்ந்த செடியில் கீழ் பகுதியில் இருக்கும் கிளையை வளைத்து, பழைய செடியில் இருந்து இரண்டு அடி தூரம் தள்ளி மண்ணில் மூடி பதியம் போடுகிறோம்.
அதன் பின், ஏற்கனவே இருக்கும் முதிர்ந்த செடியை அடியோடு வெட்டி அகற்றி விடுவோம். புதிய இடத்தில் பதியம் போட்ட செடி நிறைய கொழுந்துகளுடன் வேகமாக வளர்ந்து, நிறைய பூக்கள் வைக்கும். செடிகளை இடமாற்றி பதியம் போடுவதால், மண்ணில் இருக்கும் சத்துகள் முழுமையாக செடிகளுக்கு கிடைப்பதால், பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும். அதனால், ஒரே வயலில் பதியம் போட்டு, புதிய செடிகளை உற்பத்தி செய்து, முதிர்ந்த செடிகளை அகற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டு முழுவதும் வருமானம்… அதிக பாடு இல்லாத அரளி…
எந்த விசேஷமாக இருந்தாலும் மலர்கள் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக விற்பனை வாய்ப்பு உள்ள பயிர்களில், மலர்களும் முக்கிய இடத்திலிருக்கின்றன. இதனால், மலர் விவசாயிகளுக்கும் குறிப்பிடத்தகுந்த வருமானம் கிடைத்து வருவதால், சமீபகாலமாக மலர் சாகுபடி அதிகரித்து வருகிறது!
பொதுவாக, மலர் சாகுபடிக்கு நல்ல தண்ணீர் வளம் இருக்க வேண்டும். என்றாலும், குறைவான தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கும் ஏற்ற மலர்கள் உள்ளன. அவற்றில், முதலிடத்தில் இருப்பது, அரளி. தண்ணீர், பராமரிப்பு… என அனைத்துமே அதிகளவில் தேவையில்லாததால், பலரும் அரளியை விரும்பி சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக, இயற்கை முறையில் அரளி சாகுபடி செய்து வருகிறார், தருமபுரி மாவட்டம், கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன்.
பொம்மிடி-அரூர் சாலையில் எட்டாவது கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது, கதிரிபுரம். ஊருக்குப் போகும் சாலையில் பருத்தி, கரும்புத் தோட்டங்கள் அணிவகுக்கின்றன. அருகே உள்ள வயல்களில் கனகாம்பரம், ரோஜா என மலர்ந்து கிடந்த காட்சி, மாயவனின் அரளித் தோட்டத்துக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது.
சொல்லிக்கொடுத்த சொந்தம்!
”குடும்பத்துல பாகம் பிரிச்சப்போ… எனக்கும், அண்ணனுக்கும் முக்கால் முக்கால் ஏக்கர் நிலம் கிடைச்சுது. ஒரே கிணத்துலதான் ரெண்டு பேருக்கும் பாசனம். எனக்குச் சொந்தமான முக்கால் ஏக்கர்ல, 10 சென்ட்ல சிவப்பு அரளி, 15 சென்ட்ல வெள்ளை அரளி போட்டுருக்கேன். மீதி நிலத்துல தென்னை மரங்களும், மாட்டுக்கு சோளமும், கொஞ்சம் மல்பெரியும் போட்டுருக்கேன். இது, பூ சாகுபடிக்குப் பேர் போன பகுதி. நிறைய பேர் பூ மூலமாவே பெரிய அளவுக்கு வளர்ந்திருக்காங்க. ஊரைச்சுத்தி கல்வராயன், ஏற்காடு மலைகள் இருக்கறதால எப்போதும் குளிர் காத்து வீசிட்டே இருக்கும். அப்பப்போ மழையும் பெஞ்சுடும்.

வழக்கமா சம்பங்கி, கனகாம்பரம், காக்னா (காட்டுமல்லி அல்லது காக்கரட்டான்), மல்லி, சாமந்தினு போடுவாங்க. நானும் காக்னா, கனகாம்பரம் போட்டிருந்தேன். ஆனா, அதையெல்லாம் பறிக்கறதுக்கு அதிக ஆளுங்க தேவைப்படுவாங்க. அவங்களை வெச்சு பறிச்சு முடிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். பராமரிப்பும் அதிகம். தண்ணி இல்லேனா செடிகள் தாங்காது. நாலு வருஷத்துக்கு முன்ன நத்தம்மேடுங்குற ஊர்ல இருக்கற சொந்தக்காரங்க, ‘அரளிப் பூவை பயிர் செய்யற வேலையும் குறைவு, விலையும் நல்லா இருக்கு’னு சொன்னாங்க. அவங்ககிட்டயே நாத்துகள வாங்கிட்டு வந்து நட்டேன். அதையே ஒட்டுப்போட்டு (பதியம்) செடிகள வளர்த்துட்டுருக்கேன். நூறு சதவிகித அரசு மானியத்துல சொட்டுநீர் போட்டிருக்கேன்.
செலவைக் குறைத்த அமுதக்கரைசல்!
ஒட்டுப்போட்ட செடி மூணு மாசத்துல வளர்ந்துடும். அதுக்குப்பிறகு, செடியிலிருந்து பூ பறிக்க ஆரம்பிச்சுடுவேன். நிறைய பூ பறிச்சதும் தாய் செடியை வெட்டிவிடுவேன். செடி நல்லா வளந்துடுச்சுனா, ஒரு மாசம் வரைக்கும் தண்ணி இல்லேனாகூட தாங்கிடும். எந்த வேலைக்கும் ஆளுங்கள வெக்காம, எங்க குடும்பமே வேலை செஞ்சுடுவோம்” என்ற மாயவன், அடுத்து சொன்ன விஷயம் அனைவரும் மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான பாடம். அது-
”ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான் பண்ணிட்டுருந்தேன். பொம்மிடி பக்கத்தில இருக்கிற அருண், இயற்கை விவசாயம், இடுபொருள் தயாரிக்குறது பத்தியெல்லாம் சொல்லிக் கொடுத்தார். இப்போ, நானே அமுதக்கரைசல தயார் செஞ்சு உபயோகப்படுத்திட்டிருக்கேன். மகசூல் நல்லா இருக்குது. ‘இத்தனை நாளா தேவையில்லாம உரத்துக்கு செலவு பண்ணிட்டோமே’னு வருத்தமா இருக்கு.”
இதைத் தொடர்ந்து, அரளி சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார் மாயவன். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
திண்டுப்பாத்தி!
‘சாகுபடி நிலத்தில் செழுமையாக தொழுவுரத்தைக் கொட்டி உழுது… திண்டுப்பாத்தி முறையில் பார்களை அமைத்து, வாய்க்கால் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிக்குச் செடி 3 அடி, வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளி இருக்குமாறு, லேசாக மண்ணைப் பறித்து செடிகளை நடவு செய்ய வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, வாரம் ஒரு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற கணக்கில் அமுதக்கரைசலை (10 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 10 கிலோ மாட்டுச் சாணம் (பச்சையானது), ஒரு கிலோ நிலத்து மண்,

10 பனம்பழம் அல்லது அரை கிலோ வெல்லம் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கலக்கிவிட வேண்டும். 15 நாட்கள் தினமும் கலக்கி வந்தால், அமுதக்கரைசல் தயார்) பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். களைகள் மண்டினால், அவற்றை அகற்ற வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தில் களைகள் வளராது.
மூன்று மாதங்களில் அறுவடை!
நடவு செய்த மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கும். செடியின் அடிப்பகுதியில் இருக்கிற வளர்ந்த கிளைகளை ஒடித்து, நிலத்தில் பதியம் போட்டு புதிய செடிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாய் செடியில் பறிப்பு முடியும்போது, பதியம் போட்ட செடிகள் வளர்ந்து விடும். தாய் செடியை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக வளர்ந்த செடியிலிருந்து பூக்களை பறிக்கலாம். மற்ற பூக்களைப் போலவே மொட்டாக இருக்கும்போதே பறித்துவிட வேண்டும். செடி நம்மை விட உயரமாக இருப்பதால், நின்று கொண்டே பறிக்கலாம். பனிக் காலம் (டிசம்பர் மாதத்தில்) தவிர்த்து, மற்ற அனைத்து மாதங்களிலும் பூ பறிக்கலாம்.’
மாதம் 6 ஆயிரம் ரூபாய்!
சாகுபடிப் பாடம் முடித்த மாயவன், ”அரளி போட்டு மூணு வருஷம் ஆச்சு. சொந்தக்காரங்ககிட்ட இருந்து சும்மாவே நாத்து வாங்கிட்டு வந்துட்டேன். அதனால, அதுக்கு செலவு ஏதும் இல்ல. இதுக்கு பெருசா பராமரிப்புச் செலவும் கிடையாது. மத்த வேலைகள வீட்டுல உள்ள நாங்களே பார்த்துக்கிறோம். அதனால, செலவுனு தனியா ஏதும் கிடையாது. 25 சென்ட்ல தினமும் 3 கிலோவுல இருந்து 4 கிலோ வரைக்கும் பூ கிடைக்குது. ஒரு மாசத்துக்கு சராசரியா 100 கிலோ பூ கிடைச்சுடும். தினமும், சேலம் பூ மார்க்கெட்டுக்கு இங்கயிருந்து வண்டி போகுது. அதுல போட்டு அனுப்பிடுவேன். சீஸனைப் பொருத்து, ஒரு கிலோ அரளி… 40 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரை விலை போகும். வெள்ளை அரளியவிட, சிவப்பு அரளிக்கு கிலோவுக்கு 10 ரூபா அதிகமா கிடைக்கும். சராசரியா கிலோ 60 ரூபாய்னு வெச்சுக்கிட்டா, 100 கிலோ பூவுக்கு மாசம் 6 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. 25 சென்ட் நிலத்துல இது நல்ல வருமானம் தானே!” என்றபடியே, அடுத்த வேலைகளில் மூழ்கினார்.
________________________________________
சீஸன் சமயத்தில் கிலோ 150 ரூபாய்!
அரளிக்கு இருக்கும் வரவேற்பு குறித்து பேசிய சேலம், வ.உ.சி மலர் சந்தையில் வியாபாரம் செய்துவரும் நாகராஜ், ”சந்தைல மல்லிக்கு அடுத்த இடம் அரளிக்குதான். இங்க 200 கடைகளுக்கு மேல இருக்கு. எந்த கடையில வேணும்னாலும் விவசாயிகள் கொண்டு வந்து போடலாம். அன்னிக்கு விலையில 10% கமிஷன் எடுத்துட்டு, ரொக்கமா கொடுத்திடுவோம். இப்போ ஒரு நாளைக்கு 10 டன் அரளி வருது. குறிப்பா, பனைமரத்துப்பட்டியிலிருந்து அதிகமாக வருது. அதுக்கடுத்து பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பக்கமிருந்து வரும். இங்கருந்து சென்னை, பெங்களூருக்கு அதிகமா போகுது. வருஷம் முழுக்க வரத்து இருக்கும். சீஸன்ல கிலோ 150 ரூபாய் வரைக்கும்கூட விலை போகும். விடியற்காலை 3 மணிக்குத் தொடங்கி, சாயங்காலம் 5 மணி வரைக்கும் சந்தை இருக்கும்” என்றார்.




No comments:

Post a Comment

Pages