வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் ஸ்ரீ சாய் ராம் - சியோ தமிழ்

Breaking

Thursday, February 22, 2018

வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் ஸ்ரீ சாய் ராம்

அடுத்தவர் வாழ்வை கண்டு மகிழும்   "ஓம் ஸ்ரீ சாய் ராமின் "

நான் உன்னை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும் நான் உன்னுடன் எப்போதும் இருப்பதற்காகவும் நீ இருக்கும் திசை நோக்கி வந்து விட்டேன். நான் எங்கும் வியாபித்து இருப்பேன். என்றும் உன் நினைவுகளோடு. உனக்கு ஏற்பட்டு இருக்கும் தற்போதைய நிலை மாற போகிறது. உனது பாரத்தை முழுவதுமாக நான் சுமந்து கொண்டு இருக்கிறேன். உனக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு நாளும் தவறாமல் யோசித்து யோசித்து உனக்கு வழங்கி கொண்டு இருக்கிறேன். நீ விரும்பிய வாழ்க்கையை உனக்கு வழங்க போகிறேன் மகிழ்ச்சியாக இரு. எதை பற்றியும் கவலைப் படாமல் என்னை நினைத்து என்னை பின்பற்றி இரு. உனக்குள் இருக்கும் அத்தனை துயரங்களின் பிடியில் இருந்தும் விரைவில் நிவாரணம் வழங்க போகிறேன். யாரிடமும் வெறுப்போ விவாதமோ வேண்டாம்.

 எத்தனையோ பேர் வாழ்க்கையை தொலைத்து விட்டு என்னிடம் வந்து இருக்கிறார்கள். தயவு செய்து நீ கிடைத்த வாழ்க்கையை நிம்மதியாக வாழ கற்றுக் கொள் எதிர்த்து போராடு. உனது வாழ்க்கையும் உனது குடும்பமும் செழிப்பாக இருப்பதற்காக நான் உன் கூடவே இருப்பேன். நீ சந்திக்காத விளைவுகள் இல்லை. கவலை படாதே, நான் இருக்கிறேன். உனக்கான பொன்னான நேரம் உன்னை நெருங்கி கொண்டு இருக்கின்றது. அதுவரை காத்திரு பொறுமையாக இரு. நம்பிக்கையோடு இரு. நம்பிக்கை தான் வாழ்க்கை. நீ மகிழ்ச்சியாக இருப்பதை நானும் கண்டு களிக்க போகிறேன்... ஓம் ஸ்ரீ சாய் ராம்....

Pages