உனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து வரும் பெண்ணை மதித்து போற்றுவது ஒரு ஆணின் குணமே - சியோ தமிழ்

Breaking

Thursday, February 22, 2018

உனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து வரும் பெண்ணை மதித்து போற்றுவது ஒரு ஆணின் குணமே



   
விளையாட்டாக திருமணம் செய்து குழந்தை பிறந்தவுடன் பிரிந்து செல்லும் ஆண்களே அவள்படும் வேதனையை ஒரு முறை நினைத்துப் பார்த்ததுண்டா..????
காமம் என்பது இருவருக்கும் சுகத்தை தந்தாலும் பெண்ணவளுக்க மரண வேதனையைக் கொடுக்கின்றது.
பிரசவத்திற்கு பின் பெண்கள் மறுபிறவியே எடுக்கின்றனர்,பிள்ளைக்காக தமது வாழ்வை மரணவாயில் வரை செல்கின்றனர்.
இதன் வலியை உணர்ந்த எந்த ஆணும் தனது தாரத்தை குழந்தை போலவே பேணிக்காப்பான்.
தன் தாயை நேசிக்கும் ஆண்கள் எப்போதும் தரம்குறைந்து போய்விடவும் கூடாது.
தாய்க்குப் பின் தாரம் என்பார்கள் அந்த தாரத்தை தாங்கிப் பிடிக்கவேண்டியது ஒவ்வோரு ஆணின் கடமையே.
உனக்காக தனது குடும்பம், தனக்கான எல்லாவற்றையும் தியாகம் செய்து வரும் பெண்களை மதித்துப் போற்ற வேண்டியது தான் ஆணின் குணமாக இருத்தல் வேண்டும்.
ஆண் மகனே அன்பு செய்ய மறவாதே.இருக்கும் வாழ்வை சொர்க்கமாக மாற்றி வாழுங்கள்,ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள் அந்த வாழ்வே சொர்க்கம் தான்.

Pages