இருமலை கட்டுப்படுத்தி பசியை தூண்டும் கறி வேப்பிலை மிளகு சாதம் - சியோ தமிழ்

Breaking

Tuesday, January 30, 2018

இருமலை கட்டுப்படுத்தி பசியை தூண்டும் கறி வேப்பிலை மிளகு சாதம்



இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – ஒரு கப் + தாளிக்க
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு,
கடுகு – அரை டீஸ்பூன்
உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
கல் உப்பு – தேவையான அளவு,

செய்முறை :

* வாணலியில் மிளகை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, கருகிவிடாதபடி வறுக்கவும்.

* அடுத்து கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும்.

* பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும்.

* அடுப்பை நிறுத்தி, கடைசியில் கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

* அனைத்தும ஆறியதும் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு நைஸாக பொடி செய்யவும்.

* வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சாதத்தை சேர்த்து, கறிவேப்பிலை – மிளகு பொடியைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி பரிமாறவும்.

* கறிவேப்பிலை மிளகு சாதம் ரெடி.

* இதை சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசியையும் தூண்டும்.

Pages